திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வட்டாரங்களில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,605
வயது வரம்பு: அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு வயது 25 – 35-க்குள் இருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு 40 – 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். திருமணம் செய்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.08.2017
மேலும் விவரங்களுக்கு http://www.nellai.tn.nic.in/pdf/icdspressnews_10-08-2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
