Oரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்!

Published On:

| By Balaji

ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 35ஆயிரம் நியாயவிலைக் கடைகளில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு ஏற்றச் சம்பளம், சேதாரக் கழிவு அனுமதிப்பு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்டோபர் 14) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாயவிலை பணியாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் நியாவிலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூட்டறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வேலைக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது எனவும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share