Fதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை முகுல் வாஸ்னிக் வெளியிட, முன்னாள் மத்தியஅமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 55 அம்சங்கள் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஊழல் ஒழிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்பொருட்டு புதிய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்படும். சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் அளிக்கப்படும். திருநங்கைகளுக்கு 2 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும். ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்கு இலவசக்கல்வி அளிக்கப்படும்” போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.�,”
oதேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel