சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக இன்று (பிப்ரவரி 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “எந்த ஜாதி மற்றும் எந்த மதப்பிரிவையும் சாராதவர் என்று சான்றிதழ் அளிக்க அரசாணையோ, சட்டமோ இல்லை.
அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது.
அப்படி இருக்கும்போது சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட முடியாது.
இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களின் பலன்களை பெறுவதில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும், எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும்.
எனவே சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதோர் அரசு உத்தரவிட்டுள்ளபடி, கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம்” என்று அறிவுறுத்திய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ED ரெய்டு : பங்குச்சந்தையில் ஒரேநாளில் சரிந்த இந்தியா சிமெண்ட்ஸ் வர்த்தகம்!
ஸ்பெய்னில் முதல்வர் : ரூ.2500 கோடி முதலீடு… 1000 பேருக்கு வேலை!