MI VS SRH : ”ஒரு ரன் எடுக்க ஒரு ஓவரா?” மைதானத்திலேயே கடுப்பான நீடா அம்பானி

Published On:

| By christopher

nita ambani reaction on mi vs srh match win moment

வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுப்பதற்கு ஒரு ஓவரை விரயம் செய்த மும்பை அணியைக் கண்டு அந்த அணியின் உரிமையாளரான நீடா அம்பானியே கடுப்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. nita ambani reaction on mi vs srh match win moment

வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 17) இரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் குவித்து வெளியேறினார்.

எனினும் மற்ற வீரர்களான ரிக்கில்டன் (31), வில் ஜாக்ஸ் (36), சூர்ய குமார் யாதவ் (26) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தனர்.

களத்தில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்க, மும்பை அணி 161 ரன்கள் எடுத்த நிலையில், 17வது ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.

ஈசன் மலிங்கா வீசிய முதல் பந்தில் திலக் வர்மா 1 ரன் எடுக்க, போட்டி டிரா ஆனது.

ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், தோனி போன்று வின்னிங் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா (21)

அடுத்து இறங்கிய நமன் தீர், முதல் இரண்டு பந்துகளை டாட் வைத்து, மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அந்த ஓவரில் கடைசி பந்திலாவது ஒரு ரன் அடித்து வெற்றி பெறும் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சாண்டனர் ரன் அடிக்கவில்லை.

இதை மைதானத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மும்பை அணியின் உரிமையாளரான நீடா அம்பானியே கடுப்பாகிவிட்டார்.

இதுதொடர்பான காட்சிகளும், மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எனினும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஜீசனின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் திலக் வர்மா (21*).

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share