தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

Published On:

| By Minnambalam

தமிழக பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (அக்டோபர் 18) நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,

ADVERTISEMENT

விருதுநகர்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

next four days tamilnadu heavy rain update

அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌,

ADVERTISEMENT

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம்‌ மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
next four days tamilnadu heavy rain update

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 20-ஆம் தேதி வாக்கில் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

செல்வம்

சட்டமன்றத் தொடரையே புறக்கணிக்கலாமா? எடப்பாடி அவசர ஆலோசனை!

அதிமுக 51-வது துவக்கவிழா: எடப்பாடி – பன்னீர் தனித்தனியே கொண்டாட்டம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share