பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் (New income tax) 2025 ஐ இந்தியா அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இதனால் சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்கள் ஏப்ரல் 1 முதல் கையில் வாங்கும் சம்பளத்தில் (Take Home Salary) சிறிது அதிகரிப்பைக் காணலாம். புதிய வரி முறையின் கீழ் கையில் கிடைக்கும் நிலையான விலக்கு சலுகை, தற்போது சம்பளம் பெறும் நபர்களுக்கு ரூ. 75,000 ஆக உள்ளது. இது வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைக்கிறது. மேலும், செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கலாம்.
புதிய வரி முறையில் மாற்றம்:
புதிய வரி முறையின் கீழ், ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் வரி செலுத்துவோர் பிரிவு 87A தள்ளுபடி காரணமாக பூஜ்ஜிய வருமான வரி சலுகையை பெற முடியும். அதே நேரத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் நிலையான விலக்கைச் சேர்த்த பிறகு சுமார் ரூ. 12.75 லட்சம் வரை வரி இல்லாத வருமானத்தைப் பெற முடியும்.
இணக்கத்தை எளிதாக்கும்:
2026-27 நிதியாண்டிற்கான வருமான வரி அடுக்குகள் மாறாமல் இருந்தாலும், ஏப்ரல் மாதம் முதல் புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும். இது வரி இணக்கத்தை எளிதாக்கும் என்றும், சமீபத்திய பட்ஜெட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி நிவாரண நடவடிக்கைகளைப் பராமரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சம்பளம் கிடைக்கும்:
மொத்தத்தில், வரவிருக்கும் வரி மாற்றங்கள் வரி முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் பெறும் விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளிலிருந்து தொடர்ந்து பயனடைவதை உறுதிசெய்யும் என்று கூறப்படுகிறது. இது வருமான நிலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி முறையைப் பொறுத்து மாதாந்திர Take Home salary சம்பளத்தை சற்று மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
