‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’.. மதுரையில் பிரசாரத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

BJP Nainar

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன..

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் இன்று பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.

இதற்கான தொடக்க விழா, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் மாலையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் கள்ளசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் ? உண்மை என்னவென்றால், கரூரில் 100 காவலர்கள் கூட பாதுகாப்பிற்காக இல்லை. ஆனால், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு 6 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 42 காவல் ஆய்வாளர்கள், 87 துணை ஆய்வாளர்கள் உட்பட 1,100 காவலர்களை அனுப்பியது திமுக அரசு. இதிலிருந்தே, திமுக அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட திமுக ஆட்சி 2026 தேர்தலில் அகற்றப்படவேண்டும். அதற்காக பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டனும் கடுமையாக உழைக்கவேண்டும் என்றார்.

நயினார் நாகேந்திரன், நாளை 13-ம் தேதி சிவகங்​கை, 14-ம் தேதி செங்​கல்​பட்டு வடக்​கு, 15-ம் தேதி சென்னை வடக்​கு, 16-ம் தேதி மத்​திய சென்​னையிலும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதையடுத்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வரும் 24-ம் தேதி அரியலூர், பெரம்​பலூர், 25-ம் தேதி தஞ்​சாவூர் வடக்​கு, 27-ம் தேதி திருச்​சி, 28-ம் தேதி திண்​டுக்​கல் கிழக்​கு, 29-ம் தேதி நாமக்​கல் கிழக்​கில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஈரோடு தெற்​கு, 4-ம் தேதி கோவை வடக்​கு, 5-ம் தேதி நீல​கிரி, 6-ம் தேதி திருப்​பூர் தெற்கு என தொடர்ந்​து 28 நாட்​கள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் நயி​னார் நாகேந்​திரன், நவ.22-ம் தேதி தூத்​துக்​குடி தெற்​கில் நிறைவு செய்​கிறார். பின்​னர் இரண்​டாம்​ கட்ட பயணத்தை தேனி​யில் நவ.24-ம் தேதி தொடங்குகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share