‘காட்ஃபாதர்’ படப்பிடிப்பை முடித்த நயன்தாரா

Published On:

| By admin

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ படப்பிடிப்பை முடித்துள்ளார்.

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘லூசிஃபர்’ படம் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் என முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தெலுங்கில் இயக்குநர் மோகன்ராஜா இயக்க, இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் தன்னுடைய போர்ஷனை நயன்தாரா முடித்துள்ளார்.

இதனை இந்த படத்தின் இயக்குநர் மோகன்ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ ’காட்ஃபாதர்’ படத்திற்கான பெரும்பகுதி படப்பிடிப்பை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுடன் முடித்து விட்டோம். அடுத்தடுத்து ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’, ’காட்ஃபாதர்’ என மூன்று படங்கள் தொடர்ந்து அவருடன் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தெலுங்கில் ’காட்ஃபாதர்’ படம் தவிர்த்து, தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ’கனெக்ட்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share