இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (டிசம்பர் 25 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த சிறப்பான நாள், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கான மனநிலையை அதிகரிக்கட்டும்.
இயேசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்கள் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்ற வலியுறுத்தியது ஆகியவற்றை நாம் நினைவுகூர்வோம் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
