மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தன் மாறுபட்ட நடிப்பால் முத்திரை பதித்த கலாபவன் மணி. நேற்று மாலை சிறுநீரகக் கோளாறு காரணமாக மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட முக்கியத்தலைவர்களும், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கலாபவனின் இறப்பு குறித்து மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் கலாபவன் மணி பன்முகத்தன்மை கொண்டவர். கலாபவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.,”
