மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் தீ விபத்து!

Published On:

| By Selvam

சென்னை மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் இன்று (நவம்பர் 12) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் கொண்டாட தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நகர் பகுதியில் ஷீரடி சாய் பாபா கோவில் அமைந்துள்ளது. இன்று இரவு 8 மணியளவில் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மயிலாப்பூர் ஷீரடி சாய் பாபா கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை சுற்றி ஓலை மற்றும் பிளாஸ்டிக் வலைகள் கட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் வானில் சென்று வெடிக்கக்கூடிய ராக்கெட் பட்டாசு தீப்பொறி ஓலையில் பட்டு கோவிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தீபாவளி கொண்டாட்டம்: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share