Video: ஏலத்திற்கு பின் செம என்ஜாய்… இளம் கேப்டனுடன் ‘கூலாக’ விளையாடிய தோனி

Published On:

| By Manjula

dhoni playing tennis with rishab

நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி தரமான வீரர்களை வளைத்துப்போட்டு உள்ளது. எடுத்த 6 வீரர்களுமே சிறந்த தேர்வாக அமைந்துள்ளனர்.

ஏலத்தின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி துபாயில் தான் இருந்தார் என்றாலும், அவர் ஏலம் நடக்கும் இடத்திற்கு செல்லவில்லை.

பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் டெல்லிக்கு கேப்டன் ஆன ரிஷப் பண்ட் டெல்லி அணியின் ஏலத்தில் நேற்று (டிசம்பர் 19) பங்கு கொண்டார்.

குறிப்பாக வீரர்களை எடுப்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தோனி போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் ரிஷப் தான் அடுத்த தோனி என, கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவருமே கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் பிட்னஸ் விஷயங்களில் சறுக்குவதால் அவரால் தன்னை நிரூபிக்க முடியவில்லை. எனினும் இந்த சீசனில் மீண்டும் ஒரு தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது கிரிக்கெட் குருவான கூல் கேப்டன் தோனியுடன் சேர்ந்து, அவர் டென்னிஸ் விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் விபத்தால் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப், இந்த சீசனில் டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தோனியுடன் சேர்ந்து நேரம் செலவழித்து இருப்பது, நிச்சயம் அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை  அளித்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் முழங்கால் அறுவை சிகிச்சை செய்த தோனி தற்போது இயல்பாக விளையாடுவதை பார்த்த சென்னை ரசிகர்களும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 2!

2023-ல் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ!

வெள்ள பாதிப்பு.. தமிழகத்திற்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? – திருச்சி சிவா காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share