சபரிமலையில் புத்தாண்டு தினத்தன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 85,000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
நேற்று புத்தாண்டு தினம் என்பதால் ஐயப்பனை தரிசிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
இவர்கள் பல நாட்களுக்கு முன்பே நேற்றைய தரிசனத்துக்காக முன்பதிவு செய்திருந்தனர். மேலும் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர்.
இதனால் நேற்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்தனர். நேற்று அதிகாலை முதலே சபரிமலை சன்னிதானம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.
புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று முதல் வரும் 8ஆம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது.
இதனால் இந்த நாட்களில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
உக்ரைன் போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை துண்டாக்க முயற்சி செய்கிறார்கள்: புதின்