12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

Published On:

| By Monisha

monitoring officers appointed

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைத் தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் – அருண் ராய்
கோவை மாவட்டம் – ஜெயஸ்ரீ முரளிதரன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் – பிரதீப் யாதவ்
காஞ்சிபுரம் மாவட்டம் – செந்தில் குமார்
நாகை மாவட்டம் – ரமேஷ்சந்த் மீனா
நாமக்கல் மாவட்டம் – குமரகுருபரன்
புதுக்கோட்டை மாவட்டம் – நாகராஜன்
ராமநாதபுரம் மாவட்டம் – நந்தகுமார்
ராணிப்பேட்டை மாவட்டம் – ஷில்பா பிரபாகர் சதீஷ்
சேலம் மாவட்டம் – சங்கர்
திருப்பத்தூர் மாவட்டம் – சுகன் தீப் பேடி
திருப்பூர் மாவட்டம் – விஜயகுமார்

கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு!

கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை  ஜூன் 20ஆம் தேதி திறப்பு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share