கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மலையாள திரையுலக நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்புக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பழைய செயற்குழுவே இருக்கட்டும் என்று முன்னாள் துணைத் தலைவர் ஜெயன் சேர்தலா கூற, அதையே நடிகர் சுரேஷ் கோபியும் ஆதரித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை வெடித்தது. இதனை வைத்து பலரும் ‘அம்மா’ அமைப்பையே குறை கூறினார்கள். இதனால் , ஏற்கனவே இந்த அமைப்பின் தலைவராக இருந்து ராஜினாமா செய்த நடிகர் மோகன்லால் தலைவர் அல்லது செயற்குழு உறுப்பினர் என எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மலையாள ஊடகத்திடம் மோகன்லால் கூறுகையில், ‘நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது தான் இந்த அமைப்பு. அதில் ஒருவர் மீது புகார் எழுந்தால், அதற்காக ஒட்டுமொத்த அமைப்பை குறை கூறுவது ஏற்படையுது அல்ல’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அம்மா அமைப்புக்கு புதிதாக ஒருவர் தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஹேமா கமிட்டி வெளியான பிறகு, ஒரு சில நடிகைகள் மோகன்லால் அம்மா அமைப்பில் நடக்கும் அனைத்தையும் அறிந்து வைத்து கொண்டு அமைதியாக இருந்தார் என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
மோகன்லாலை விட்டால் அடுத்து மம்முட்டி அம்மா அமைப்பின் தலைவராக ஆவரா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் சுரேஷ் கோபி அரசியலில் பிசியாக இருப்பதால் அம்மா அமைப்பில் தலைவராக முடியாத சூழலும் உள்ளது. இதனால், அம்மா அமைப்புக்கு அடுத்து யார் தலைவராக வருவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை அப்டேட்!
உற்சாகமான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி?