திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் இன்று (அக்டோபர் 11) பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை என்ற செய்தி கிடைத்ததும், உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்தேன்.
தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திக் திக் நிமிடங்கள்… “ஹார்ட் பீட் அதிகமாக துடிக்கிறது” – திருச்சி விமானத்தில் பயணித்தவர் பேட்டி!