இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். Mk Stalin urge tamilnadu
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தினார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை நேற்று (பிப்ரவரி 19) இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அந்த கடிதத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் பிப்ரவரி 9ஆம் தேதி எழுதிய விரிவான பதிலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். நேற்று இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்திய படி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். Mk Stalin urge tamilnad