அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Selvam

mk stalin upset ponmudi

அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இரவு 8.30 மணியளவில் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் முதல்வர் ஸ்டாலின் மிகவும் அப்செட்டாக உள்ளார். பாட்னாவை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பெங்களூரில் நடத்தும் கூட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலினை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்து அமலாக்கத்துறை விவகாரங்கள் குறித்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இன்று அடைத்து விடுவார்கள் என்றும் பொன்முடியை அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின் பெங்களூருக்கு புறப்பட்டபோதே அப்செட்டாக தான் சென்றுள்ளார். பெங்களூரு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் சகஜமாக பேசாமல் மிகவும் களைப்பாகவும் தளர்வாகவும் இருந்துள்ளார். பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்தான தகவல்கள் அவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!

பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share