ஆளுநர் ரவியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Selvam

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (டிசம்பர் 30) மாலை ராஜ்பவனில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் டிசம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருக்கிறார். மத்திய அரசின் நியமன பிரதிநிதியான ஆளுநர் மசோதா விவகாரத்தில் ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, குடியரசு தலைவருக்கு அனுப்புவது என மூன்று வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே தீர்வு காண வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதல்வருடன் அமர்ந்து இதற்கு தீர்வு கண்டால் பாராட்டுவோம். இதற்காக முதல்வரை ஆளுநர் அழைத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

இருவருக்குமிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று நடைபெற உள்ள ஆளுநர் – முதல்வர் இடையிலான சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ள பாதிப்பு: ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு வழங்க ஸ்டாலின் உத்தரவு!

நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share