தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பான தீர்ப்பின் அடிப்படையில், 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திடம் எழுப்பி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்த சட்டப் போராட்டத்தில் பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களும் கட்சித் தலைவர்களும் இணையுமாறு இன்று (மே 15) வேண்டுகோள் விடுத்துள்ளார். mk stalin condemns Union Government
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் மத்திய அரசின் குடியரசு தலைவர் குறிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது. mk stalin condemns Union Government

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியே தவிர வேறில்லை.
இது சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக சவால் செய்கிறது.
மசோதா மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை ஆளுநர்களுக்கு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை இருக்க வேண்டும்?
மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?
பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?
நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. குடியரசு தலைவர் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. mk stalin condemns Union Government
இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்த சட்டப் போராட்டத்தில் பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களும் கட்சித் தலைவர்களும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரை நாம் நமது முழு பலத்தோடு எதிர்த்துப் போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
