அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் ஆஹா அறிவிப்புகள்!

Published On:

| By Aara

MK Stalin announcements government employees

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 28) முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கான பின் வரும் அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். MK Stalin announcements government employees

ADVERTISEMENT

*அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

*அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பணப் பலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து  பணப் பலன்களை பெறலாம்.

ADVERTISEMENT

*அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.

* 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பருக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.

ADVERTISEMENT

*அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும்.

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

*பொங்கல் போனஸ் ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.MK Stalin announcements government employees

* பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.”

ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். MK Stalin announcements government employe

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share