முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 26) சட்டமன்றத்தில் தெரிவித்தார். Mk Stalin announced ex mla
சட்டமன்றத்தில் இன்று காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.
அப்போது, ஓய்வுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்,
“முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.30,000 என்பதை ரூ.35,000 ஆக 1.4.2025 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ.15,000-லிருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படும்.
முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி, ரூ.75,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். Mk Stalin announced ex mla
.