உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் உள்ள பொன்முடியினுடைய இல்லத்தில் இரவு 10.45 மணிக்கு சோதனை நிறைவடைந்தது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லம் மற்றும் விழுப்புரத்தில் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில் இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடியை அழைத்து சென்றனர்.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலவே பொன்முடியும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்திருக்கக்கூடிய தகவலின் படி பொன்முடியினுடைய சில சொத்துக்களை மட்டும் அமலாக்கத்துறை முடக்கம் செய்து கைது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!