லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்விற்கு எடுத்த வழக்கின் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஒப்படைத்தது.
2008 -ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக அதிமுக ஆட்சிக்காலத்தில் 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த எம்.பி எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவம்பர் 1) விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் வழக்கறிஞர் சந்துரு ஆஜராகி, “வழக்கின் நோட்டீஸ் கிடைத்துவிட்ட நிலையில் ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கலான் “சார்பட்டா”வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்: விக்ரம்