பக்தர்களை குறிவைத்து மோசடி… மத்திய அரசு வார்னிங்!

Published On:

| By Selvam

நாடு முழுவதும் மத தலங்களுக்கான யாத்திரைகள், சுற்றுலா தலங்களுக்குச் செல்வது ஆகியவற்றுக்காக முன்பதிவு செய்வதாக சிலர் போலியாக விளம்பரங்கள் செய்து கட்டணம் வசூலித்து மோசடி செய்வதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இணையதள குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது. MHA advisory scams targeting

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT

“புனித தல யாத்ரிகர்களுக்கான விருந்தினர் மாளிகை, ஹோட்டல் முன்பதிவு, வாகன முன்பதிவுகள், விடுமுறை சுற்றுலா பயணங்கள் போன்றவை தொடர்பாக மோசடிகள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து, இந்த இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தும்போது, உறுதிப்படுத்தலை பெறாமலோ அல்லது சேவை எதுவும் பெறப்படாமலோ தாங்கள் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்கிறார்கள்.

ADVERTISEMENT

எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பணம் செலுத்துவதற்கு முன்பாக இணையதளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் அல்லது நம்பகமான பயண முகவர் அமைப்புகள் மூலம் மட்டுமே முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். போலி, மோசடி தளங்கள் தொடர்பாக www.cybercrime.gov.in என்ற தளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. MHA advisory scams targeting

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share