இந்திய உற்பத்தித் துறையில் வீழ்ச்சி : அமெரிக்கா செய்த வேலை.. மீண்டு வருமா இந்தியா?

Published On:

| By Santhosh Raj Saravanan

manufacturing sector in india experienced down trend in November month

அமெரிக்காவின் அதிகப்படியான வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவின் உற்பத்தித் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் துறை நவம்பர் மாதத்தில் முந்தைய 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. விற்பனை மற்றும் உற்பத்தி வளர்ச்சி குறைந்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். சந்தையில் நிலவும் சவால்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து HSBC இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள உற்பத்தி PMI (Purchasing Managers’ Index ) அறிக்கையில், PMI குறியீடு 50க்கு மேல் இருந்தால் வளர்ச்சி என்றும், 50க்கு கீழ் இருந்தால் சரிவு என்றும் அர்த்தம் ஆகும்.

ADVERTISEMENT

இந்த சரிவுக்கு அமெரிக்காவின் வரிகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்றுமதி ஆர்டர்கள் வளர்ச்சி ஒரு வருடத்திலேயே மிகக் குறைவாக இருந்துள்ளது. இதனால் ஏற்றுமதி ஆர்டர்களுக்கான குறியீடு 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை அதிகரித்தாலும், ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. வரிகளின் தாக்கம் குறித்த கவலைகள் காரணமாக, எதிர்கால உற்பத்தி குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை நவம்பரில் கணிசமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை மற்றும் வரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நம்பிக்கை உள்ளது. வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், இந்த ஆண்டே அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும், இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான வரிப் பிரச்சினையைத் தீர்க்கும் என்றும் இந்திய அரசு நம்புகிறது. அமெரிக்காவின் வரிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியுள்ளன. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட சிறிது காலம் ஆகலாம் என்றாலும், அமெரிக்காவுடன் ஒரு தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

நவம்பர் மாதத்தில் பணவீக்கமும் குறைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. விற்பனை விலை உயர்வு 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. புதிய ஆர்டர்கள் குறைந்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் பணியாளர் எண்ணிக்கையை சரிசெய்துள்ளன. தொடர்ச்சியான 21 மாத வேலைவாய்ப்பு வளர்ச்சிக்குப் பிறகு, வேலைவாய்ப்பு வளர்ச்சி மிக மெதுவாகியுள்ளது.

அடுத்த 12 மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நிறுவனங்களின் நம்பிக்கை நேர்மறையாக இருந்தாலும், இந்த நம்பிக்கை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேச நிறுவனங்களிடமிருந்து வரும் போட்டி அதிகரித்துள்ளதால், இந்த எதிர்மறை கணிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share