மணிப்பூர் வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே 4ஆம் தேதி குக்கி இன பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
இந்நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய வரும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணி மணிப்பூர் செல்கிறது.
இந்தச்சூழலில் 26 நொடி அடங்கிய மணிப்பூர் வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோன்று குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடம் அரசு ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், வீடியோ பதிவு செய்த செல்போனை பறிமுதல் செய்து, அந்த நபரையும் போலீஸ் கைது செய்திருப்பதாகவும் மணிப்பூர் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
“ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்” டிடிவி தினகரன்
‘நீட்’டால் எம்பிபிஎஸ் படிக்க முடியவில்லை’: மாணவனுக்கு உறுதியளித்த முதல்வர்!