இந்தி மொழி பேசாத மாநிலங்களை மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்வதாகவும், இந்தி மொழியை திணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. Speak in Hindi if you want to stay in Bengaluru
இந்தசூழலில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசிக்க விரும்பினால் இந்தி பேச வேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் ஒருவர் சண்டையிடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆட்டோவில் இருந்து இறங்கி செல்லும் அந்த நபர் டிரைவரிடம் மிகவும் கோபமாக, “பெங்களூருவில் வசிக்க விரும்பினால் இந்தியில் பேசுங்கள்” என்று சொல்கிறார். உடனடியாக அந்த நபரை அவரது நண்பர்கள் அழைத்து செல்ல முற்படுகின்றனர்.
இந்தி மொழியில் பேசிய நபருக்கு கன்னட மொழியில் பதிலடி கொடுத்த ஆட்டோ டிரைவர், “நீங்க பெங்களூருக்கு வந்துருக்கீங்க, கன்னடத்துல பேசுங்க. நான் இந்தியில பேசமாட்டேன்” என்கிறார். இந்த வீடியோக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் இந்தி மொழி பேச சொன்ன நபரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “வட இந்தியர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் மொழியான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். Speak in Hindi if you want to stay in Bengaluru
மற்றொரு நபர், “இந்தி மொழியால் தான் ஆணவமும் வெறுப்பும் வருகிறது. வேறு எந்த மொழி பேசுபவர்களும் மற்றவர்களை இப்படி தங்கள் மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தும் துணிச்சல் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.