தென்னாப்பிரிக்காவில் பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திகளில் ஒருவரான ஆசிஷ் லதா ராம்கோபினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Mahatma Gandhi’s Great‑Granddaughter Sentenced to 7 Years in Jail in Fraud Case
தென்னாப்பிரிக்காவில் அமைதிக்கான அரசு சார்பற்ற நிறுவனம் நடத்தி வருகிறார் ஆசிஷ் லதா ராம்கோபின். இவர் மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் ரூ 3.22 கோடி கடன் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து துணிகள் இறக்குமதி செய்வதாக கூறி ஆசிஷ் லதா இந்த கடனை மகாராஜிடம் இருந்து பெற்றுள்ளார். ஆனால் இக்கடனை ஆசிஷ் லதா திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த பண மோசடி வழக்கில்தான் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிணைத் தொகை செலுத்தியதால் ஆசிஷ் லதா தற்போது விடுவிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி குடும்பத்தில் யாருடைய வாரிசு?
மகாத்மா காந்தியின் 2-வது மகன் மணிலால் மோகன்தாஸ் காந்தி. தென்னாப்ப்பிரிக்காவில் வசித்த மணிலால் காந்தி, குஜராத் முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்த ஃபாத்திமா கூல் என்பவரை காதலித்தார். இந்த திருமணத்துக்கு மகாத்மா காந்தி ஒப்புக் கொள்ளவில்லை. இதனையடுத்து சொந்த ஜாதியிலேயே சுசீலா என்ற பெண்ணை பெற்றோர் ஏற்பாட்டுடன் திருமணம் செய்து கொண்டார் மணிலால் காந்தி. இவர்களுக்கு பிறந்தவர்கள் சீதா துபேலியா, அருண் மணிலால் காந்தி, எலா காந்தி ராம்கோபின்.
எலா காந்தி, தென்னாப்பிரிக்காவில் சமூக செயற்பாட்டாளர். தென்னாப்பிரிக்கா அரசியல்வாதியான Mewa Ramgobin என்பவரை எலா காந்தி திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஆசிஷ் லதா ராம்கோபின்.