சுவாதி கொலை: பெற்றோர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Published On:

| By Jegadeesh

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர், ரயில்வே நிர்வாகத்திடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22 ) உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐடி ஊழியரான சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்பவரை காவல் துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

swathi murder case

இந்நிலையில் , தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார்.

எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக ரூ.3 கோடி வழங்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

swathi murder case

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு இன்று (செப்டம்பர் 22 ) விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி ஆர் சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவில் இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் விதித்த நிபந்தனை!

சீட் பெல்ட் அலாரம்: மத்திய அரசின் புதிய விதிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share