நாளை சந்திர கிரகணம் நிகழவிருப்பதால் முக்கிய கோயில்களில் நடை சாத்தப்படவுள்ளது.
நாளை (மார்ச் 3) இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.
இதையொட்டி முக்கியக் கோயில்கள் நடை சாத்தப்படும் மற்றும் திறக்கப்படும் நேரங்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
* கிரகணம் ஆரம்பம்: பிற்பகல் 3:20 மணி
*கிரகணம் முடிவு: மாலை 6:47 மணி
இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 9 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை பிற்பகலில் இருந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் – காலை 8 .30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
தஞ்சை பெரிய கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் காலை 8.20 முதல் இரவு 7.30 வரை
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் – நாள் முழுவதும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடை சாத்தப்படும்.
கிரகணம் முடிந்ததும் அனைத்துக் கோயில்களிலும் பரிகார பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
