பான் கார்டுக்கு 1000 ரூபாய் அபராதம்: ஆதாருடன் லிங்க் பண்ணிட்டீங்களா இல்லையா?

Published On:

| By Santhosh Raj Saravanan

link your pan card with aadhaar card before december month end

பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் சில நாட்களே அவகாசம் இருக்கிறது.1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையா? இது உங்களுக்கு மிக முக்கியமான செய்தி. பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நெருங்குகிறது. இந்த காலக்கெடுவிற்குள் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்கத் தவறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். இணைப்பை தாமதப்படுத்துவது உங்கள் பான் கார்டு செயலிழக்க வழிவகுக்கும்.

ADVERTISEMENT

வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்கு தொடங்க, முதலீடு செய்ய, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற பல அரசு சார்ந்த வேலைகளுக்கு பான் கார்டு மிக அவசியம். உங்கள் பான் கார்டு செயலிழந்தால், பல முக்கிய வேலைகள் பாதிக்கப்படும். எனவே இவற்றை உடனே இணைக்க வேண்டும். வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் வீட்டிலிருந்தே இதைச் செய்யலாம்.

பான்-ஆதார் இணைப்பு நிலையை எப்படி சரிபார்ப்பது?

ADVERTISEMENT

உங்கள் பான் கார்டு ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, வருமான வரி இணையதளத்திற்குச் சென்று ‘Link Aadhaar Status’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிடவும். உங்கள் இணைப்பு நிலை திரையில் காண்பிக்கப்படும்.

எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?

ADVERTISEMENT

பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும். இந்த காலக்கெடுவிற்குள் உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கத் தவறினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். அதன் பிறகுதான் பான்-ஆதார் இணைப்பு முழுமையடையும். அபராதம் செலுத்திய பிறகும் இணைப்பு நிறைவடையவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share