பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீஸ் விசாரணை!

Published On:

| By Kavi

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (மே 23) அவர் பஞ்சாபில் பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில், அவரது வருகையை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளன. இதனால் பஞ்சாபில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, ‘பிரதமர் மோடியை கொலை செய்ய போகிறேன்’ என்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு தொடர்புகொண்ட நபர் கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்திருக்கிறார்.

இந்த தகவலை உடனடியாக சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, சென்னை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

ADVERTISEMENT

இதுபோன்ற மிரட்டல்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், என்ஐஏ அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், என்.ஐ.ஏ அதிகாரிகளும் தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “நேற்று இரவு 9.30 மணிக்கு சென்னை என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அழைப்பு வந்துள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்டமாக இந்தியில் பேசிய அந்த நபர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள், வட இந்தியாவில் இருக்கும் அவர்களது சக அதிகாரிகளுக்கும், சென்னை சைபர் கிரைமுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்கின்றனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கல்கி 2898 AD: பிரபாஸுடன் இணைந்து கலக்கும் புஜ்ஜி ரோபோட்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share