பொதுக்குழு தீர்ப்பால் எந்த சஞ்சலமும் இல்லை : ஓ.பி.எஸ் தரப்பு!      

Published On:

| By Kalai

அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும், 2 நீதிபதிகள் தீர்ப்பால் சஞ்சலமில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு இல்லை என்று கூறிய கோவை செல்வராஜ், “தனி நீதிபதியும், 2 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒருங்கிணைப்பாளரும், தலைமைக்கழக நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

கட்சியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒ.பன்னீர்செல்வத்தை தான் ஆதரிக்கிறார்கள்.

ADVERTISEMENT

காரணம் அவருடைய செயல்பாடுகள் மற்றும் அவர் மீதுள்ள நம்பிக்கை. 5, 6 பணக்காரர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு இந்த கட்சியை ஏதோ நிறுவனம் போல வழிநடத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அது ஒருநாளும் நடக்காது. தேர்தல் ஆணையம் இந்த பிரச்சினையை பார்த்துக் கொள்ளும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, பொருளாளராக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார்.

ADVERTISEMENT

5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை, தொண்டர்களின் ஆதரவோடு பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார். சட்டப்போராட்டம் தொடரும், எங்களுக்கு எந்த சஞ்சலமும் இல்லை” என்று தெரிவித்தார்.

கலை.ரா

பன்னீரின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share