தொழில்நுட்பக் கோளாறு: ஜிஎஸ்எல்வி ஏவுதல் ஒத்திவைப்பு!

Published On:

| By Balaji

Q

பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு , தகவல் தொடர்பு ஆகியவற்றுக்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள புவியை கண்காணிக்க உதவும் ஜிஐ சாட் 1 செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான கவுன்ட் டவுன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட இருந்தது.

செயற்கைக்கோளை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்படும் 14ஆவது ராக்கெட் ஆகும். அதோடு 2020ல் ஏவப்படும் முதல் ராக்கெட்டும் இதுவாகும்.

முன்னதாக சந்திராயன் 2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மாற்றுத் தேதியில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share