ராகுலுக்கு திருமணம் எப்போது? – பிரஸ் மீட்டில் நடந்த கல கல!

Published On:

| By Selvam

ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சி தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராகுல் காந்தி பற்றி லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாரத் ஜோடா யாத்திரா நிகழ்ச்சியை ராகுல் சிறப்பாக நடத்தி முடித்தார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து அவர் பேசியதை கண்டு வியந்தேன்.

ராகுல் காந்தியை திருமணம் செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுகூட தாமதமாகவில்லை, நேரம் இருக்கிறது. பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் தனது தாடியை நீக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. தயவுசெய்து தாடி வளர்க்காதீர்கள். நரேந்திர மோடி ஏன் தாடி வளர்க்கிறார் என இன்று வரை எனக்கு தெரியவில்லை.

திருமணத்திற்கு ராகுல் மறுப்பு தெரிவிப்பதால் அவரது அம்மா வருத்தப்படுகிறார். திருமணம் குறித்து ராகுலிடம் பேச சொன்னார். நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியின் திருமண ஊர்வலத்தில் மணமகன் தரப்பிலிருந்து கலந்து கொள்ள விருப்பப்படுகிறோம். ராகுல் திருமணம் செய்து கொண்டால் தான் நாம் அனைவரும் தொடர்ந்து பயணிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் சொல்லிவிட்டதால் எனது திருமணம் நிச்சயம் நடக்கும் என்றார்.

லாலு பிரசாத்யாதவின் இந்த பேச்சால் பிரஸ் மீட்டில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

செல்வம்

எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? நிதிஷ் குமார் விளக்கம்!

கையில் கரண்டி: சமையல் மாஸ்டர் ஆனாரா சுரேஷ் ரெய்னா?

“செந்தில் பாலாஜி கைதால் ஸ்டாலின் அச்சத்தில் உள்ளார்” – எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share