மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஏப்ரல் 6-ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், திமுக தலைவர் கருணாநிதியை நாவால் சுட்டெரித்தார், வைகோவின் பேச்சுக்கு அனைத்து தலைவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். திமுக-வினர் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கும்விதமாக, வைகோவின் உருவபொம்மையை எரித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலிலும் திமுக-வினர் பெரும் திரளாக திரண்டு உருவபொம்மையை எரித்து, இவ்வளவுகாலம் முற்போக்கு சிந்தனைப் போர்வையில், பிற்போக்காக இருந்த வைகோவை எதிர்த்து கடுமையான கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள்.
வைகோவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
