தமிழகத்தை சேர்ந்த 17 வயது இளம் வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.
செஸ் வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்ற மூன்றாவது வீரரகாக அறியப்படுகிறார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற அவர் நான்கே ஆண்டில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக முன்னேறியுள்ளார்.
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) சர்வதேச செஸ் சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் 37 ஆண்டுகளாக் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் குகேஷ்.
அதுமட்டுமின்றி உலக தரவரிசை பட்டியலிலும் விஸ்வநாதன் ஆனந்தை முந்தியுள்ளார் குகேஷ். 2,758 புள்ளிகளுடன் குகேஷ் 8வது இடத்திலும் 2,754 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும் உள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் வெளியான சர்வதேச செஸ் சம்மேளனத்தின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை செஸ் தொடரில் மேக்னஸ் கார்லனுடன் விளையாடி 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 19வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
தன் பங்கிற்கு களமிறங்கிய டிவிஎஸ்…. புதிய அப்டேட் இதோ!
யுபிஐ வசதியுடன் ‘ஸ்மார்ட் ரிங்’: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அசத்தல்!