டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. kkr survive in play off chance with defeat dc
டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 30) இரவு நடைபெற்ற போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங் 36 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் விப்ராஜ் நிகாம் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆனால் பாஃப் டூ பிளசிஸ் (62), அக்சர் (43) மற்றும் விப்ராஜ் நிகம் (38) மட்டுமே கடைசி வர போராட, கே.எல்.ராகுல் (7), அசுதோஷ் சர்மா(7) உட்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
அந்த அணி கடைசி ஓவரில் 25 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வாழ்வா சாவா ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது கொல்கத்தா அணி.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ள கொல்கத்தா அணி. மேலும்