ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

Published On:

| By Selvam

கோடை தொடங்கிவிட்டது. வத்தல், வடகம் போன்றவற்றை செய்து அசத்துபவர்கள் ஒருபுறம் இருக்க… அதற்கிடையில் இந்த பச்சை மிளகாய் மோர் வற்றலையும் செய்து வைத்துக்கொண்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து தயிர் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பச்சை மிளகாய் (நீளமானது அல்லது குண்டு மிளகாய்) – கால் கிலோ
கெட்டித் தயிர் – 2 கப்
கல் உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தயாரான மிளகாய் பொரிப்பதற்கு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

பச்சை மிளகாய்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் ஊசியால் இரண்டு மூன்று துளை போடவும். (இப்படிச் செய்வதால் இதில் உப்பும் தயிரும் உள்ளே போய் சுவை அதிகமாகும்). ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்டு பச்சை மிளகாயை அதில் போட்டு குலுக்கவும். ஒரு நாள் முழுவதும் இதை மூடி போட்டு ஊறவைக்கவும். மிளகாயில் உப்பு நன்கு இறங்கி இருக்கும். பிறகு அதில் தயிர் ஊற்றி நன்கு குலுக்கவும். எல்லா மிளகாயிலும் தயிர் பரவி இருக்க வேண்டும். இதை ஒரு தாம்பாளத்துக்கு மாற்றி பரப்பிவிட்டு மூன்று நாள்கள் காயவிடவும். இப்போது சுவையான மோர் மிளகாய் வற்றல் தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு

மகளிர் தினம் : 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share