கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அப்படிப்பட்ட சோளத்தில் வித்தியாசமான இந்த கிரிஸ்பி கார்ன் ஃப்ரை செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் – 2 கப்
கொத்தமல்லித்தழை விழுது – 2 டேபிள்ஸ்பூன்
புதினா தழை விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
மைதா மாவு – 4 டேபிள்ஸ்பூன்
ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓட்ஸ் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
மேலே தூவ:
சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
எப்படிச் செய்வது?
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) வாய் அகன்ற பவுலில் போட்டு சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து மூடி 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்துப்போட்டுப் பொரித்தெடுத்து, சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் சில்லி 65
கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் மசாலா பக்கோடா
சட்டப்பேரவையில் வாய்ப்பு கொடுத்திருந்தால் கிழி கிழியென கிழித்திருப்பேன் : எடப்பாடி