‘ கே. ஜீ. எஃப் ‘ யஷ் – நயன்தாரா நடிக்கும் ‘ டாக்ஸிக் ‘ ; நாளை முதல் படப்பிடிப்பு !

Published On:

| By Kavi

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘ கே. ஜீ. எஃப் ‘ புகழ் யஷ் – நயன்தாரா நடிக்கும் ‘ டாக்ஸிக் ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ( ஆக.8 ) தொடங்குமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கே.ஜீ. எஃப் – 1 ‘ , ‘ கே.ஜீ.எஃப் – 2 ‘ ஆகிய படங்கள் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் யஷ்.  அவரது அடுத்த திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார் எனவும் படத்தின் பெயர் ‘ டாக்ஸிக் ‘ எனவும் சில மாதங்களுக்கு முன்பு படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் கோலிவுட்டைச் சேர்ந்த நயன்தாரா, பாலிவுட் நடிகைகளான ஹூமா குரேசி, கியாரா அத்வானி, மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை ( ஆகஸ்ட் 8 ) முதல் தொடங்கவுள்ளது.

நடிகர் யஷ் தனது குடும்பத்துடன் நேற்று தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்று, பிராத்தனை செய்தார். இந்தப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட்கள் பெங்களூரில் போடப்பட்டுள்ளது.

சில காட்சிகள் மும்பையில் எடுக்கப்படவுள்ளது. மேலும், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த திரைப்படம் ஏப்ரல் 10, 2025 ஆம் ஆண்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதே தேதியில் நடிகர் பிரபாஸின் ‘ தி ராஜா சாப் ‘ திரைப்படமும் வெளியாகவுள்ளதால் பாக்ஸ் ஆஃபிஸ் மோதல் ஏற்படலாம். எனவே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் புகார் அளித்துள்ளோம்: மன்சுக் மாண்டவியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share