கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கிரைம் திரில்லர் கண்ணிவெடி!

Published On:

| By Selvam

தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து பல தரமான படைப்புகளை வணிக சமரசங்களுக்கு உட்படாமல் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என  வெற்றி படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு புதுமையான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகிறது ‘கண்ணிவெடி’.

அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கும் திரில்லர் படமான ’கண்ணிவெடி’யில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகும் ‘கண்ணிவெடி’ தொழில் நுட்பம், அது சார்ந்து சமூகத்தில் ஏற்படும் நன்மைகள், பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான களத்தோடு, ரசிகர்களை விறுவிறுப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், உற்சாகமான, அவரது அசாத்திய திறமைகளுக்கு தீனி போடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை ஜூலை 15 அன்று சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கணேஷ் ராஜ் மற்றும் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.

படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பான கதை சொல்லல் மற்றும் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் சேரும் தரமான படமாகவும், திரைப்பட ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாகவும் இருக்கும்..” என்றார்.

இராமானுஜம்

“கல்வியின் மூலம் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கலாம்” – சூர்யா

கடவுளிடம் வரம் கேட்ட ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share