உலகமயமாக்கலுக்குப் பிறகு நம்முடைய அலுவலகங்கள், வீடுகளின் வடிவமைப்புகள் எல்லாமே மாற்றமடைந்து விட்டன. புதுப்புது கட்டுமானப் பொருட்களின் வரவும், அதற்கு முன்பு ஆடம்பரம் என்று நினைத்த லிஃப்ட், ஏசி போன்றவற்றின் பயன்பாடும் பரவலாயின. இதனால் வெளிப்புறத்தில் எத்தகைய பெரிய மாசடைந்த சூழல் நிலவுகிறதோ அதே போன்றதோர் உட்புற மாசு, கட்டடத்துக்குள்ளும் இருக்கிறது.
ஒரு கட்டடத்துக்கு வென்டிலேஷன் மிகவும் முக்கியம். சூரிய வெளிச்சமும் உள்ளே வர வேண்டும். காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட முறையான வென்டிலேஷன் இங்கு இல்லை. குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தவும், வெளிப்புறமிருந்து வரும் மாசிலிருந்து தப்பிக்கவும் ஜன்னல்கள் இல்லாத கட்டடங்கள் கட்ட ஆரம்பித்தோம். அப்படியே ஜன்னல்கள் இருந்தாலும் அவை திறக்கப்படுவதே இல்லை.
இன்றைய நவீன யுகத்தில் சில வசதிகளை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாது. அவற்றில் ஏர்கண்டிஷனும் முக்கியமானது. எனவே, சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம். அலுவலக நேரம் தொடங்கும் முன்னர் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை சிறிது நேரம் திறந்து வைக்கலாம். வீடுகளில் மதிய நேரம் ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்திருந்தாலே போதும். சூரிய வெளிச்சமும் வரும். உள்ளேயிருக்கும் காற்று வெளியேறி ஃப்ரெஷ்ஷான காற்று உள்ளே வரும் வாய்ப்பும் கிடைக்கும்.
வருடம் ஒருமுறை பொங்கல் பண்டிகையின் போது வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருள்களைத் தூக்கியெறிந்துவிட்டு, சுத்தம் செய்கிறோம். இதுபோன்ற ஒரு ‘டீப் க்ளீனிங்’ (Deep cleaning) முறையை வருடம் ஒருமுறையாவது எல்லோரும் செய்வது நல்லது. இதேமுறையை அலுவலகத்திலும் வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி ஜி கோவில்: அப்டேட் குமாரு
தோனி ஓய்வா? CSK-வின் காசி விஸ்வநாதன் சொன்ன புதிய தகவல்!