காத்துவாக்குல ரெண்டு காதல்: தாமதத்துக்கு காரணம்?

Published On:

| By Balaji

முழுக்க முழுக்க காதலும் காதல் நிமித்தமாக உருவாகும் படங்களில் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துவிட்டது. த்ரில்லர், பேய், போலீஸ் ஸ்டோரி படங்களே அதிகமாக பார்க்க முடிகிறது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் ஜானரில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் சமந்தா ஆகிய மூவர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படம் செம ஹிட். அதே ஜானரில் முக்கோன காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கிறார். இது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம்.

லாக்டவுனுக்கு முன்பாக, இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. லாக்டவுன் தளர்வுகளின் போது கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்புகள் நடந்தன. அப்படி, முக்கால் பாக ஷூட்டிங் முடிதுவிட்டது.

எக்கச்சக்கப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதனால், அவரின் கால்ஷீட் கிடைப்பதில் பெரிய சிக்கல் நிலவியது. அதனால், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடைசி ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது. இந்த ஷூட்டிங் கூட திட்டமிட்டப்படி துவங்கவில்லை. மூன்று நாட்கள் தாமதமாகவே துவங்கியிருக்கிறது.

விஜய்சேதுபதி வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அந்த ஷூட்டிங் முடிய கூடுதலாக மூன்று நாட்கள் தேவைப்பட்டதால், கொஞ்சம் பேசி அட்ஜெஸ் செய்திருக்கிறார்கள். அதனால், திட்டமிட்ட தேதியிலிருந்து தாமதமாகவே விஜய்சேதுபதியும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்கிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். எதுஎப்படியோ, இன்னும் 10 நாட்களில் படத்துக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

படத்துக்கான எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளை செப்டம்பரில் முடித்துவிட்டு, அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவினால், ஓடிடியில் வெளியாக நிறைய வாய்ப்பு இருக்கிறது.

**- ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share