‘நேத்து ஞாயித்துக்கிழமை… எதையோ செய்து சமாளிச்சாச்சு. இன்னிக்கு திங்கட்கிழமை என்ன குழம்பு வைக்கிறது….’ என்கிற கேள்வி பலரின் மண்டைக்குள்ளும் ஓடும். இந்த நிலையில் இந்த வார முதல் நாளை ஸ்பெஷலாக்க இந்த கறிவேப்பிலைக் குழம்பு வைத்து அசத்தலாம்.
என்ன தேவை?
கறிவேப்பிலை – 2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8 (இரண்டாக உடைத்து போடவும்)
கடலைப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, புளிக்கரைசல் ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலைப் பொடி தூவி, இறக்கி மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துப் பரிமாறவும். இந்தக் குழம்பு தொக்கு பதத்தில் இருக்கும். எனவே, அளவோடு பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா சண்டே ஸ்பெஷல்: உயிருள்ள ஊறுகாய் பற்றி தெரியுமா உங்களுக்கு?
கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!
IPL 2024 Awards: ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை – எந்த விருது யாருக்கு?