தூத்துக்குடி அருகேயுள்ள பாதுகாக்கப்பட்ட வான் தீவு பகுதியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி இன்று (செப்டம்பர் 24) படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு கடல் பகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக வான் தீவின் நிலப்பரப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், வான் தீவின் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில், அலைத்தடுப்புச் சுவர்கள், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளையும், வனத்துறை மூலம் வான் தீவு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வான் தீவு பகுதியில் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் பனை மர செடிகளையும், பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி, கடலில் இறங்கிய ஆமை மற்றும் நட்சத்திர மீன்களை கைகளில் பிடித்து ரசித்தார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செல்வம்
இனி இணையம் வழியாகவே பட்டா மாற்றிக் கொள்ளலாம்… எப்படி?
பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!