ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி என்கவுண்டர்!

Published On:

| By Selvam

ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி குள்ளா என்கிற விஷ்வாவை தனிப்படை போலீசார் இன்று (செப்டம்பர் 16) என்கவுண்டர் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் குள்ளா என்கிற விஷ்வா. இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூர் அதிமுக முன்னாள் ஒன்றிய தலைவர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விஷ்வாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோகண்டி பகுதியில்  விஷ்வா பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோகண்டி பகுதிக்கு சென்ற காவல்துறையினர் விஷ்வாவை கைது செய்ய முற்பட்டபோது அவர் போலீசாரை  கத்தியால் தாக்கியுள்ளார். இதில் எஸ்.ஐ முரளி பலத்த காயமடைந்துள்ளார்.

இதனால் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் விஷ்வாவை என்கவுண்டனர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

செல்வம்

ஓசோன் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share