நடிகையாக சென்று அம்மாவாக வந்திருக்கிறேன்: அமலா

Published On:

| By Kavi


சர்வானந்த், அமலா, ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் ‘கணம்

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 2) சென்னையில் நடைபெற்றது.

kanam movie amala speech

இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பேசும்போது, “என்னுடைய இளமைக் காலத்தில் என்னை ஆதரித்த தமிழ் மக்களிடமிருந்து கதாநாயகியாகப் போனவள், 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்திருக்கிறேன்.

இப்படம் எனக்கு மிக மிகச் சிறப்பான படம். ஒரு படத்தைப் பற்றி சாதாரணமாக யாரும் இவ்வளவு பேச மாட்டார்கள்.

எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டிலிருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும்.

உங்களைச் சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம் இது. ஆழமான அன்பை, உணர்வுப்பூர்வமாக அழகாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்.

அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும்.

இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் பெருமையடைகிறேன். இந்தக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்காக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிற்கு நன்றி.

உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்குத் தெரியும். நான் எந்தப் படம் பார்த்தாலும் பார்வையாளராகத்தான் பார்ப்பேன்.

அதேபோல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி, இப்படத்தை ஒரு பார்வையாளராகப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன் என்றார்.

இராமானுஜம்

டாக்டர் பட்டம் வாங்கிய யுவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share